Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 3 இடங்களில் ஆகஸ்ட் 1 முதல் ஸ்மார்ட் பார்க்கிங்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 3 இடங்களில் ஆகஸ்ட் 1 முதல் ஸ்மார்ட் பார்க்கிங்

Share:

ஷா ஆலாம், ஜூலை.31-

சிலாங்கூர் மாநிலத்தில் 3 மாவட்டங்களில் நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் பார்க்கிங் முறை அமல்படுத்தப்படவிருக்கிறது.

ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் செலாயாங் நகராண்மைக் கழகம் ஆகியவையே அந்த மூன்று இடங்களாகும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டம் முதலில் மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இத்திட்டத்தின் அமலாக்கத்தை ஒத்தி வைத்துள்ளது என்று சிலாங்கூர் மாநிலத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான விவசாய மக்கள் தொகை கணக்கெடுப்பு இடைக்கால அறிக்கையை வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, சிலாங்கூர் மாநிலத்தில் செயல்திறன் மற்றும் மாநில வருவாயை அதிகரிக்க பல மாநகர் மன்றங்கள் மற்றும் நகராண்மைக் கழகங்கள் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் முறையை செயல்படுத்துவது தொடர்பாக மாநில அரசு தொடர்ந்து விவாதித்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

இதில், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 1 முதல் ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூலம் பார்க்கிங் கட்டண வசூலைச் செயல்படுத்த ரந்தாயான் மெஸ்ரா சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது