கெதெரே, கம்போங் சிமா, பகுதியில், 19 வயது கல்லூரி மாணவி நூர்ஃபிஸ்யா சுல்கிஃப்லி கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதற்காக, அனுமதியின்றி போலீஸ் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசுப் மமாத் தெரிவித்துள்ளார்.
இச்செயலானது, அத்தகவல்கள் போலீசாரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவை என்ற தவறான நம்பிக்கையை பொதுமக்களிடம் உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பரபரப்பான தலைப்புகளுடன் தனது புகைப்படமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக யூசுப் மமாத் தெரிவித்துள்ளார்.
இது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய செயல் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும் யூசுப் மமாத் வலியுறுத்தியுள்ளார்.








