Aug 11, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா – சீனா கூட்டு பங்காளித்துவம் மேலும் வலுவடையும் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

மலேசியா – சீனா கூட்டு பங்காளித்துவம் மேலும் வலுவடையும் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.16-

உலகளாவிய நிலையில் புவிசார் அரசியல் சவால்கள் தொடர்ந்து நிலவி வந்த போதிலும் சீனாவுடனான மலேசியாவின் கூட்டு பங்காளித்துவம் வலுவுடன் வளர முடியும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு, வலுவான விநியோகச் சங்கிலித் தொடர்பு, தொழில்துறை ஒத்துழைப்பு, மேம்பட்ட உறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையில் இந்த கூட்டு பங்காளித்துவம் வளரும் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, இன்று காலையில் இஸ்தானா நெகராவில் வரவேற்று நடத்திய சந்திப்புக்குப் பின்னர் மாமன்னர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் பிராந்திய இணைப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியுடன் இது ஒத்துப் போவதால், சீன நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மலேசியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதற்கு பெரும் கட்டமைப்பு இருப்பதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்தானா நெகாராவில் சீன அதிபரை வரவேற்கும் நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி