கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தமது 14 மற்றும் 12 வயது மகன்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது மாது, இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த மாதுவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை, நீதிபதி ஷஃபீரா முகமட் சைட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட வேளையில், தாம் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மே 2 ஆம் தேதி ஷா ஆலாம், புன்சாக் ஆலாமில் கைது செய்யப்பட்ட அந்த மாது, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது பிரமம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மே 10 ஆம் தேதி வரை கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த மாது பின்னர் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த மாது தமது செயலை பதிவு செய்து வைத்திருந்த கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


