கோம்பார்க் - சுங்கை புசு மற்றும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகப் பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவதால், கடுமையான துர்நாற்றம், ஈக்கள் தொல்லை மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிச் சாலைகளும் நதியும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து ஓராண்டுக்கும் மேலாகப் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், குடியிருப்பாளர்கள் மாநிலச் செயலாளரிடம் அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளனர்.
மேலும், நிலத்தின் தகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிலத்தின் நிலை, சட்டப்பூர்வமாக்கும் திட்டம், சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு, எடுக்கப்படும் நடவடிக்கைகள், நிரந்தரத் தீர்வு மற்றும் சாலை சீரமைப்பு போன்ற ஆறு கேள்விகளை எழுப்பிய அவர்கள் உரிய தீர்வை நாடியுள்ளனர்.








