Apr 14, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

Share:

அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் கஞ்சா வளர்க்க வேண்டும் என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சரான முகமட் சாபு கூறுவது போல், போலியாக மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருவது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போலியான புகைப்படத்தை பரப்பியவர்களுக்கு எதிராக முகமட் சாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், அப்புகைப்படம் முற்றிலும் பொய்யானதும் அவதூறானது, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியிடம் அமைச்சர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related News

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்