பேரா மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் 51 விழுக்காடு குறைந்துள்ளது. பேராவில் வருமையை ஒழிக்கும் செயல் திட்டத்தின் வழி இந்த வெற்றியை அம்மாநிலம் அடைந்துள்ளது என முதல்வர் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமாட் தெரிவித்துள்ளார்.
அத்திட்டத்தில் மாவட்ட நிலையிலான பல துறைகளைச் சார்ந்த பல்வேறு ஏஜென்சிகள் உடடுத்தப்பட்டன.
இவ்வாண்டு சனவரி தொடங்கி குடும்பங்களின் தகவல்கள் திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 51 விழுக்காடு, அதாவது 4,583 வறிய நிலை குடும்பங்கள் அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக சராணி குறிப்பிட்டார்.








