Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் தாமதம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் தாமதம் வேண்டாம்

Share:

வரும் மே இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், பள்ளி முடிந்து, பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் பெற்றோர்கள் காலத்தாமதம் காட்ட வேண்டாம் என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால், இரு சிறார்களுக்கு வெப்ப பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் பிள்ளைகளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல், அவர்களை உடனடியாக அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாகும் என்று அச்சங்கத்தின் தலைவர் aminuddin awang தெரிவித்தார்.

Related News