Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழலைத் துடைத்தொழிப்பதில் அஸாம் பாக்கியைப்  போல் திராணி மிக்கவர்கள் யாரும் இல்லை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் புகழாரம்
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழலைத் துடைத்தொழிப்பதில் அஸாம் பாக்கியைப் போல் திராணி மிக்கவர்கள் யாரும் இல்லை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் புகழாரம்

Share:

ஜோகூர் பாரு, மே.24-

நாட்டில் லஞ்ச ஊழல் வேர்களை முழு வீச்சில் வேரறுப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியைப் போல் திராணி மிக்கவர்கள் யாரும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழ்மாலை சூட்டினார்.

அஸாம் பாக்கியின் பதவி ஒப்பந்த காலம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருப்பதை டத்தோஸ்ரீ அன்வாரின் புதல்வியும், பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவருமான நூருல் இஸா உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையாகக்
குறைகூறிய போதிலும், அந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரின் பதவிக் காலத்தை அரசாங்கம் மீண்டும் நீட்டித்திருப்பதை பிரதமர் தற்காத்துப் பேசினார்.

ஜோகூர் பாரு, பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று இரவு பிகேஆர் கட்சியின் பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்து, கொள்கை உரையாற்றிய போது, டத்தோஸ்ரீ அன்வார், அஸாம் பாக்கியின் துணிகரச் செயலைப் பாராட்டினார்.

நாட்டின் வளங்களைக் கோடிக் கணக்கு ரிங்கிட் மதிப்பில் சுருட்டியவர்கள், பெரும் பணக்காரர்கள் மற்றும் பெரிய தவுக்கே ஆகியோருக்கு எதிராக ஊழல் தொடர்பில் துணிகரமாக எஸ்பிஆர்எம் நடவடிக்கை எடுத்து இருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

அதுவும் அஸாம் பாக்கியினால் மட்டுமே இது சாத்தியமானது என்று பிரதமர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு