சீனாவின் ஹைக்கூ நகருக்கும் பினாங்கிற்கும் இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதன் மூலம் பினாங்குடன் நேரடி விமான இணைப்பைக் கொண்டுள்ள சீன நகரங்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரிக்கும் என மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரக் குழுத் தலைவர் வோங் ஹோன் வை தெரிவித்துள்ளார்.
ஹைனான் ஏர்லைன்ஸ் இயக்கும் இந்த விமானச் சேவை வாரத்திற்கு இருமுறையாக புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
முதல் விமானமானது ஹைக்கூ மேலான் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு, மலேசிய நேரப்படி இரவு 8.45 மணியளவில் பினாங்கை வந்தடையும்.
திரும்பும் விமானம் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1 மணிக்கு ஹைகோ சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான இணைப்பு சீன சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்ப்பதுடன், இரு நகரங்களுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்துறை, கலாசாரம், படைப்பாற்றல் துறை மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் என வோங் ஹோன் வை குறிப்பிட்டுள்ளார்.








