ஜார்ஜ்டவுன், மார்ச்.02-
ஸாகாட் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, பினாங்கு துணை முதல்வர் முஹமட் அப்துல் ஹாமிட், ஜார்ஜ்டவுனில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு இன்று காலை வருகை புரிந்தார்.
பினாங்கு இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவரான முஹமட் அப்துல் ஹாமிட், நிலம் வாங்கியது தொடர்பில், மூத்த அதிகாரி ஒருவர், ஸாகாட் நிதியில் ஊழல் புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமது தரப்பு வாக்குமூலத்தை அளிக்கவுள்ளார்.
முன்னதாக, இவ்வழக்கு விசாரணை தொடர்பாக, பல அலுவலகங்களை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதனிடையே, ஸாகாட் நிதி குறித்த அனைத்து ஆவணங்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் முஹமட் அப்துல் ஹாமிட் குறிப்பிட்டுள்ளார்.








