குவாந்தான், பிப்ரவரி.25-
இஸ்லாமை அவமதிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மாணவர் புனித குர்ஆன் மீது கால் வைப்பது போன்ற புகைப்படம் ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, இன்று காலை குவாந்தானில் அவரைப் போலீசார் கைது செய்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
சமயத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், புனிதமாகக் கருதப்படும் ஒன்றை களங்கப்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 295 - இன் கீழ் இவ்வழக்கானது விசாரணை செய்யப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.








