Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இலக்குக்கு உரிய மக்களுக்கான பணமீட்புத் திட்டம் இபிஎப்.பில் இனி இல்லை
தற்போதைய செய்திகள்

இலக்குக்கு உரிய மக்களுக்கான பணமீட்புத் திட்டம் இபிஎப்.பில் இனி இல்லை

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இ.பி.எஃப். பில் இலக்குக்கு உரிய மக்களுக்கான பணமீட்புத்திட்டத்தை அரசாங்கம் இனி அமல்படுத்த இயலாது என்று துணை நிதி அமைச்சர் டத்தோ செரி அஹ்மத் மஸ்லான் தெரிவித்துள்ளர்ர்.

இத்தயை பண மீட்புத் திட்டத்திற்கு பதிலாக, அடுத்த ஆண்டு முதல் சந்தாதாரர்களுக்கான நெகிழ்வான நிதி கணக்கு வசதி ஏற்படுத்தப்படும். இது இபி.எப். சந்தாதாரர்களுக்கான மூன்றாவது கணக்கு அல்லது நெகிழ்வான நிதி கணக்கு என்று அழைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்றாவது இபிஎப். கணக்கின் மூலமாக பி40, எம்40, தி20 என்று சந்தாதாரர்களின் பின்னணி எதனையும் பார்க்காமல், ஆபத்து அவசர வேளைகளில் உதவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.

தற்போது இபிஎப். சந்தாதாரர்களுக்கு முதலாவது, இரண்டாவது என இரண்டு கணக்குகள் மட்டுமே உள்ளன. புதியதாக இந்த மூன்றாவது கணக்கில் சேர்க்கப்படும் தொகையின் மூலம் சந்தாதாரர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பொருளாதார சிரமங்களுக்கு, அவர்களின் சுமையை குறைப்பதற்கு மூன்றாவது கணக்கு உதவும் என்று டத்தோ மஸ்லான் தெளிவுபடுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு