தஞ்சோங் மாலிம், ஏப்ரல்.26-
பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெறுவதால், இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக மையப் பிரிவான UPU முறையானது தகுதியான மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதை உறுதிச் செய்வதாகவும், சிறந்த முடிவுகளைப் பெற்றும் இடம் கிடைக்காத மாணவர்கள் UPU-வை அணுகித் தெளிவு பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படாமல் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், பல்கலைக்கழகங்கள் தவிர பாலிடெக்னிக், TVET போன்ற உயர்திறன் கல்வி வாய்ப்புகளையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.








