தற்போது மலேசியாவில் வேலையில்லாதோர் விழுக்காடு 3.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு 3 விழுக்காடாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
இளைஞர்கள், பட்டதாரிகள் மத்தியில் நிலவி வரும் வேலையில்லாத பிரச்சனையைக் குறைத்து அவர்களை பணியமர்த்தம் செய்ய அமைச்சு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.








