Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஐவர் சுடப்பட்டதற்குக் காரணம் என்ன?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.25-

பந்திங், தஞ்சோங் ரூ கடற்பகுதியில் அந்து அந்நிய ஆடவர்கள் சுடப்பட்டதற்குக் காரணம் என்ன என்பது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த அந்த ஐவரை கடல்சார் போலீசார் மடக்கி போது, அவர்களை பாராங்கினால் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

படகில் பயணம் செய்த அவர்கள், கடல்சார் போலீசாரின் இயந்திரப்படகை மோதியுள்ளனர். நான்கு முறை மோதப்பட்டப் பின்னர், கடல்சார் போலீஸ்காரர்களை பாராங்கினால் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

அப்போது தங்களை தற்காத்துக் கொள்வதற்கு கடல்சார் போலீசார் துப்பாக்கி பிரயோகம் நடத்திய போது ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் காயமுற்றார். காயமுற்ற நபர், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடல்சார் போலீசார், போலீசில் புகார் ஒன்றை செய்துள்ளதாக ஹுசேன் ஒமார் கான் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி