Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பெரியளவில் டீசல், எரிபொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பெரியளவில் டீசல், எரிபொருள் பறிமுதல்

Share:

கெடா, , ஜாலான் அலோஸ்டார் – சுங்கைப்பட்டாணியில் எண் இடப்படாத ஒரு ஸ்டோர் கிடங்கில் போலீசார் நடத்திய ஒப் டிரிஸ் சோதனை நடவடிக்கையில் அரசாங்க உதவித்தொகைக்குரிய டீசல் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 51 , 600 வெள்ளி மதிப்புள்ள 24, 000 ஆயிரம் லிட்டர் டீசலை எண்ணெய் கைப்பற்றப்பட்டதாக கெடா மாநில தலைமை போலீஸ் அதிகாரி எஃபென்டி ரஜ்னி காந்த் தெரிவித்தார்.

அந்த ஸ்டோர் கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 200 வெள்ளியாகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் எஃபென்டி ரஜ்னி காந்த் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளூரை சேர்ந்த 20 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக எஃபென்டி ரஜ்னி காந்த் தெரிவித்தார்.

Related News