பொதுப் போக்குவரத்து ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மின்தூக்கியைப் பயன்படுத்த முடியாமல் தவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக, இ.ஆர்.எல் விளக்கம் அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயணி, தனது வருகை மற்றும் தேவையான உதவி குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கியிருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயிலில் இருந்து பாதுகாப்பாக இறங்க பணியாளர்கள் உதவியதுடன், பயன்படுத்தப்பட்ட சாய்தளப் பலகையை அகற்றும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தவறான சூழலில் பகிரப்பட்டதாக நிறுவனம் விளக்கமளித்தது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, வசதியான, தடையற்ற பயணத்தை உறுதி செய்ய ரயில் பணியாளர்கள் எப்போதும் தயாராக இருப்பதாக இ.ஆர்.எல் வலியுறுத்தியுள்ளது.








