Aug 22, 2026
Thisaigal NewsYouTube
லம்பீர் தேசியப் பூங்காவில் 31 வயது பெண் மாயமானார்
தற்போதைய செய்திகள்

லம்பீர் தேசியப் பூங்காவில் 31 வயது பெண் மாயமானார்

Share:

சபா, லம்பீர் தேசியப் பூங்காவில் மலையேற்றத்திற்குச் சென்ற 31 வயது பெண் ஒருவர், காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, அந்தப் பெண் உட்பட ஆறு பேர் கொண்ட குழு, நேற்று காலை 9 மணியளவில் மலையேற்றத்தைத் தொடங்கிய பின்னர் நண்பகல் 12 மணியளவில் மலையின் உச்சியை அடைந்து, பின்னர் 1 மணியளவில் உச்சியிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினர்.

கீழே இறங்கும் போது, வெரோனிக் ஜோசப் தனது நண்பர்களை விட வேகமாக முன்னேறி சென்றதாகவும் ஆனால் இலக்கிடப்பட்ட பகுதியில் அவர் இல்லாததை நண்பர்கள் உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து, நண்பர்கள் அவரைத் தொடர்புகொண்டும், சுற்றுப்புறப் பகுதிகளில் தேடியும் தகவல் கிடைக்காததால், இந்த விவகாரம் லம்பீர் தேசியப் பூங்கா ரேஞ்சர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டு அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related News