மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் முன்னாள் அதிகாரியான ஜேம்ஸ் சாய் அல்லது சாய் ஜின் ஷெர்னிடம் இன்று விசாரணையை நிறைவு செய்தது.
பிரிட்டனில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸ் உடனான மெகா ஒப்பந்தத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிக்க ஜேம்ஸ் சாய் ன்று காலை 10 மணிக்கு SPRM தலைமையகத்திற்கு வருகை தந்தார். சுமார் 8 மணிநேர விசாரணைக்குப் பிறகு, மாலை 6.30 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
முன்னதாக, விசாரணைக்கு ஒத்துழைக்க வழங்கப்பட்ட பல அவகாசங்களைத் தவறவிட்ட ஜேம்ஸ் சாய்க்கு எதிராக, கடந்த மார்ச் 4-ஆம் தேதி தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.








