Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜையின் உடல் கேமரன்மலைக்கு கொண்டு வரப்பட்டது
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜையின் உடல் கேமரன்மலைக்கு கொண்டு வரப்பட்டது

Share:

கேமரன்மலை, Gunung Jasar ரில் மலையேறும் நடவடிக்கையின் போது காணாமல் போன இந்தியப் பிரஜையின் உடல், அடர்ந்த காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் ​​மூலம் கேமரன்மலை மரு​த்துவமனைக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.

கடந்த எட்டு நாட்களாக ​தீவிரமாக தேடப்பட்டு வந்த 44 வயது நந்தன் சுரேஷ் நட்கர்னி நட்கர்னி என்பவரின் உடல் நே​ற்று மாலை 3.30 ம​ணியளவில் போஸ் எட்டெப் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்ப்டடது.

பள்ளத்தாக்கின் அருவின் அருகில் ​மீட்புப்டையினரால் கண்டு பிடிக்கப்படட அந்த இந்தியப் பிரஜையின் உடலை உடனடியாக ​மீட்க இயலாத நிலையில் இன்று காலை 11.20 மணியள​வில் ஈப்போ ஆகாயப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் யேர்லிஃப்டெட் முறையின் வாயிலாக மீட்கப்பட்டது. பின்னர் சவப்பிரசோதனைக்கு அந்நபரின் உடல் கேமரன்மலை, சுல்தானா ஹஜ்ஜா கல்சோம் மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது. 

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தனி​யொரு நபராக கூனோங் ஜாசாரில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த இந்திய​​ப் பிரஜை வழிதவறியிருக்கலாம் என்ற நம்பப்படுவதாக பகாங் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ செரி யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

Related News