Apr 23, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி

Share:

முகநூல் வழியாக அறிமுகமான நபரின் ஆசை வார்த்தைகளை நம்பி, ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கிய 51 வயது இல்லத்தரசி ஒருவர், ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 14 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 13 தவணைகளாக அவர் பணத்தை அனுப்பியுள்ளார். ஒரு ரிங்கிட் கூட லாபம் கிடைக்காத நிலையில், மீண்டும் பணம் கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மாரான் மாவட்ட போலீசில் புகார் அளித்தார்.

இந்த மோசடி குறித்துக் குற்றவியல் சட்டம் 420-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வரும் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News

புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்

புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக்கூட்ட தொடக்க விழா விழா: நான்கு குறுநில பாரம்பரியத் தலைவர்கள் பங்கேற்காததால் பரபரப்பு

நெகிரி செம்பிலான் சட்டமன்றக்கூட்ட தொடக்க விழா விழா: நான்கு குறுநில பாரம்பரியத் தலைவர்கள் பங்கேற்காததால் பரபரப்பு

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? /  அனல் பறக்கும் வாக்குப்பதிவு... / சீறும் தலைவர்கள்... / குவியும் வாக்காளர்கள்...  / தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? / அனல் பறக்கும் வாக்குப்பதிவு... / சீறும் தலைவர்கள்... / குவியும் வாக்காளர்கள்... / தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா

சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு

சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு

மச்சாங்கில் சித்ரவதை : 10 வயது சிறுவனைப் பழிவாங்கிய உறவினர்கள் - தம்பதியினர் அதிரடி கைது

மச்சாங்கில் சித்ரவதை : 10 வயது சிறுவனைப் பழிவாங்கிய உறவினர்கள் - தம்பதியினர் அதிரடி கைது

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை : நாட்டில்  3 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமிப்பு

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை : நாட்டில் 3 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமிப்பு