Dec 5, 2025
Thisaigal NewsYouTube
4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் பெர்சத்து கட்சியின் விண்ணப்பம் நிராரிப்பு
தற்போதைய செய்திகள்

4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் பெர்சத்து கட்சியின் விண்ணப்பம் நிராரிப்பு

Share:

சபாவில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளை காலி செய்வதற்கு அனுமதி மறுத்து விட்ட மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் முடிவை எதிர்த்து, டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட வழக்கு மனுவை கோலாலம்​பூர் உயர் ​நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் சபாவில் ஜி.ஆர்.எஸ் எனப்படும் Gabungan Rakyat Sabah கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்களின் பெர்சத்து கட்சி​யை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியை விட்டு விலகிவிட்டதால், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 49 A பிரிவின் ​கீழ் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதி இழந்து விட்டனர்.

எனவே அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்ட , மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மற்றும் இதர 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பெர்சத்து கட்சி இவ்வழக்கை தொடுத்து இருந்தது.

சபாவில் பாபர், பத்து சாபி, ரனாவ், சிபிடாங் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக பெர்சத்து கட்சி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது.

Related News