புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரை, அநாகரிகமான முறையில் வீடியோ படம் பதிவு செய்ததாக நம்பப்படும் 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணை, மேடைக்கு கீழே நின்று கொண்டிருந்த ஓர் ஆடவர், வீடியோ படத்தை பதிவு செய்த முறை அருவருப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அன்றிரவு 11 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக ACP Zam குறிப்பிட்டார்.








