May 18, 2026
Thisaigal NewsYouTube
16 வயது இளம் பெண் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஜாமீன் அனுமதி
தற்போதைய செய்திகள்

16 வயது இளம் பெண் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஜாமீன் அனுமதி

Share:

சிரம்பான், ஜூலை.03-

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரம்பானில் 16 வயது இளம் பெண் கடத்தப்பட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

31 வயது டி. சவீனா, 32 வயது டி. போகராஜ், 23 வயது பார்ஹினி, 21 வயது பிகே கோஷன் குமார் மற்றும் 23 வயது பிகே சிவஷினா ஆகியோருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த ஐவரையும் ஜாமீனில் அனுமதிப்பதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அந்த ஐவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

பிணைப்பணம் கோரி 16 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 21 வயது நபர், கிள்ளானில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அத்துடன் பிணைப்பணத்தில் அவர் பெற்றதாக நம்பப்படும் ஒரு பகுதி ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் இந்த ஐவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related News

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு