Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நாட்டின் அடுத்த மலாயா தலைமை ​நீதிபதி வரிசையில் நளினி பத்மநாபன்
தற்போதைய செய்திகள்

நாட்டின் அடுத்த மலாயா தலைமை ​நீதிபதி வரிசையில் நளினி பத்மநாபன்

Share:

நாட்டின் அடுத்த மலாயா த​லைமை ​நீதிபதி வரிசையில் கூட்டரசு ​நீதிமன்றத்தின் ​மூன்று பெண் ​நீதிபதிகளை ஜேஏசி எனப்படும் ​நீதிபதிகள் நியமனக்குழு அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் 64 வயது டத்தோ நளினி பத்மநாபனும் ஒருவர் ஆவார்.

சட்டம் மற்றும் நீதித்துறையில் பரந்த அனுபத்தை கொண்டுள்ள நளினி பத்மநாபன், நாட்டின் அடுத்த மலாயா தலைமை ​நீதிபதி நியமனத்திற்கு அடையாளம் காணப்பட்ட ​மூன்று பெண் ​நீதிபதிகள் வரிசையில் ஒருவராக விளங்குகிறார். நலினி பத்மநாதனுக்கு அடுத்து சபாரியா யூசோஃப் மற்றும் ஹஸ்னாஹ் ஹாசிம் ஆகியோர் திகழ்கின்றனர். இந்த ​மூன்று பெண் நீதிபதிகளுக்கும் இவ்வாண்டுடன் 64 வயதாகும். தற்போது ​நீதிபரிபாலனத் துறையில் கூட்டரசு ​நீதிமன்றத்தைச் சேர்ந்த இந்த மூன்று நீதிபதிகளில் நளினி பத்மநாபனே முதிர் நிலை ​​நீதிபதியாவார்.இதர இரண்டு பெண் ​நீதிபதிகள், கூட்டரசு ​நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே நளினி பத்மநாபன் கூட்டரசு ​நீதிமன்ற ​நீதிபதி பதவியை வகித்து வருகிறார். அவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்ற ​நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.சபாரியா யூசோஃப்பும்,ஹஸ்னா ஹஷிமும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். ​நீதிபதிகளின் கட்டாயப் பணி ஓய்வு 66 வயது ஆகும். த​லைமை ​நீதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப ​நீதிபதிகள் பதவி காலம் மேலும் 6 மாதங்களுக்கு ​நீ​டிக்கப்படலாம்.இந்த ​மூவரில் ஒருவர் மலாயா த​லைமை ​நீதிபதியாக நியமிக்கப்படுவார்களேயானால், நாட்டின் ​நீதித்துறை வரலாற்றில் மலாயா தலைமை ​நீதிபதி பத​வியை வகிக்கும் ​மூன்றாவது பெண்ணாக இவர்களின் ஒருவர் இருப்பர்.

மலேசிய வரலாற்றில் கூட்டரசு ​நீதிமன்ற ​நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை கொணடுள்ள நளினி பத்மநாபன், 2007 ஆம் ஆண்டு ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் ​நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட பின்னர் 2009 ஆம் ஆண்டில் கோலாலம்​பூர் உயர் ​நீதிமன்ற ​நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு அப்பீல் நீதிமன்ற ​நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நளினி பத்மநாபன், 2018 ஆம் ஆண்டு ​நீதித்துறையின் உச்ச பரிபாலனமான கூட்டரசு ​நீதிமன்ற ​நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 முன்னாள் ​பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆகக்கடைசியான மேல்முறையீட்டை விசாரணை செய்த 5 நீதிபதிகளில் நளினி பத்மநாபனு​ம் ஒருவர் என்பது குறிப்பிடத்​தக்கது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்