Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது
தற்போதைய செய்திகள்

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.19-

தனது காதலியைப் பெர்லிஸில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற 21 வயது இளைஞரும், அவரது 19 வயது காதலியும் கார் விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.

21 வயது Pang Sheng Qing மற்றும் அவரது 19 வயது காதலி Sheng Qing ஆகியோரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

பினாங்கில் வேலை செய்த தனது காதலியை அழைத்துக் கொண்டு, பெர்லிஸ், Pauh பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு Sheng Qing காரில் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 1.05 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள ஜித்ரா (Jitra) டோல் சாவடி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, கார் கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடி அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது கார் 85 சதவீதம் எரிந்து சேதமடைந்திருந்தது. காருக்குள் இருந்த இருவராலும் வெளியே வர முடியாமல் போனதால், அவர்கள் இருவரும் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

உயிரிழந்த Sheng Qing தனது தந்தையின் வியாபாரத்தில் உதவி செய்து வந்தார். இந்த எதிர்பாராத இழப்பால் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காதலியைத் தனது வீட்டிற்கு அறிமுகப்படுத்த ஆசையாகச் சென்ற இளைஞனின் பயணம், மரணத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு