சிங்கப்பூரில் உள்ள தேவாலயம் ஒன்றில், வழிபாடு செய்ய வந்த பலரைக் கன்னத்தில் அறைந்த நபர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மே 3-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில்,144 பிரின்செப் தெரு இல் அமைந்துள்ள, சிங்கப்பூர் லைஃப் தேவாலயம் வளாகத்தில் இச்சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்தை போலீசார் அடைந்த போது, அந்நபர் அங்கு இருந்த பலரை அறைந்துவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படுகின்றது.
இந்த சம்பவத்தில், 66 வயதுடைய பெண் ஒருவர் கண் அருகே அறைந்ததால் ரத்தக்காயம் அடைந்தார்.
அவர் சுயநினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அந்நபர் 33 வயது மலேசியர் என்பது தெரியவந்த நிலையில், போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.








