கோலாலம்பூர், மார்ச்.17-
நூலாசியரான பெண் தொழில் முனைவர் ஒருவர், தனது முக நூலில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பதிவேற்றம் செய்த உள்ளடக்கம் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் 13 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
அனைத்து போலீஸ் புகார்களும் நேற்று இரவு 11.30 மணி வரை பெற்றவையாகும். கடந்த சனிக்கிழமை காஜாங், பெரானாங் போலீஸ் நிலையத்தில் 34 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் முதல் புகாரை அளித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
75 வயதுடைய அந்த மாது அடையாளம் காணப்பட்டு விட்டார். விசாரணைக்கு விரைவில் அ ழைக்கப்படுவார் என்று ஐஜிபி விளக்கினார்.








