Mar 17, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் உட்கொண்ட நபரினால் ஒப்பந்தத் தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட நபரினால் ஒப்பந்தத் தொழிலாளி மரணம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 28 -

கோலாலம்பூர், ஜாலன் கெப்போங் கில் போதைப்பொருள் உட்கொண்ட நபர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதப்பட்டதில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் காயமுற்றனர்.

இந்த சாலை விபத்து நேற்று காலை 7 மணியளவில் நிகழ்ந்திருப்பதாக கோலாலம்பூர், போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் காவல்துறை தலைவர் ஏ.சி.பி சரிபுடின் மொஹாமாட் சாலே தெரிவித்தார்.

புலாத்தான் கெப்போங் கிலிருந்து கெப்போங் கிற்கு 19 வயதுடைய இளைஞன் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா கார் விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்ததாக சரிபுடின் மொஹாமாட் கூறினார்.

அந்நபர் ஓட்டிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது மோதியதாக நம்பப்படுவதாக சரிபுடின் மொஹாமாட் விவரித்தார்.

இவ்விபத்தில் 23 வயதுடைய அந்நிய பிரஜை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் 31, 38 வயதிற்கு உட்பட்ட இருவரும் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு