பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறையை ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு சோமுவிடம் வழங்கியிருக்கும் பினாங்கு மாநில அரசின் முடிவு, விவேகமான நடவடிக்கை அல்ல. அந்த துறை வேறு நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி ராமன் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு, சுற்றுச்சூழல் துறையை தன் வசம் கொண்டு இருப்பது தவறில்லை. ஆனால், அவரிடமே வீடமைப்புத்துறையும் ஒப்படைக்கப்பட்டு இருப்பதுதான் பெரும் தவறாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலருமான மீனாட்சி ராமன் சுட்டிக்காட்டினார்.
வீடமைப்புத்துறையும், சுற்றச்சூழல் துறையும் எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரிடமே ஒப்படைக்கப்படக்கூடாது. மலேசிய அமைச்சரவை முறையிலும் இவ்விரு துறைகளும் ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. வீடமைப்புத்திட்டத்திற்கு பொறுப்பான ஒருவரிடம் எவ்வாறு சுற்றுச்சூழல் துறை ஒப்படைக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பிறை சட்டமன்ற உறுப்பினர் சுந்தராஜுவிடமே இவ்விரு துறைகளும் ஒப்பைடக்கப்பட்டிருப்பது அதில் சுய நலன் சார்ந்த முரண்பாடுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதையும் மீனாட்சி ராமன் சுட்டிக்காட்டினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


