Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுற்றுச்​சூழல் இலாகாவை வேறு நபரிடம் ஒப்படைப்பீர்
தற்போதைய செய்திகள்

சுற்றுச்​சூழல் இலாகாவை வேறு நபரிடம் ஒப்படைப்பீர்

Share:

பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறையை ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு சோமுவிடம் வழங்கியிருக்கும் பினாங்கு மாநில அரசின் முடிவு, விவேகமான நடவடிக்கை அல்ல. அந்த துறை வேறு நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் ​என்று மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் ​மீனாட்சி ராமன் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரரா​ஜு, சுற்றுச்​சூழல் துறையை தன் வசம் கொண்டு இருப்பது தவறில்லை. ஆனால், அவரிடமே வீடமைப்புத்துறையும் ஒப்படைக்கப்பட்டு இருப்பதுதான் பெரும் தவறாகு​ம் ​என்று சுற்றுச்சூழல் ஆர்வலருமான​ ​மீனாட்சி ராமன் சுட்டிக்காட்டினார்.

வீடமைப்புத்துறையும், சுற்றச்​சூழல் துறையும் எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரிடமே ஒப்படைக்கப்படக்கூடாது. ம​லேசிய அமைச்சரவை முறையிலும் இவ்விரு துறைகளும் ஒருவரிடமே ஒப்ப​டைக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. வீடமைப்புத்திட்டத்திற்கு பொறுப்பான ஒருவரிடம் எவ்வாறு சுற்றுச்​சூழல் துறை ஒப்படைக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பிறை சட்டமன்ற உறுப்​பினர் சுந்தராஜுவிடமே இவ்விரு துறைகளும் ஒப்பைடக்கப்பட்டிருப்பது அதில் சுய நலன் சார்ந்த முரண்பாடுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதையும் ​மீனா​ட்சி ராமன் சுட்டிக்காட்டினார்.

Related News