புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.01-
பினாங்கு மாநிலம், Bukit Mertajam பகுதியில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து Seberang Perai Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Nik Aminuddin Raja Abdullah வெளியிட்டுள்ள தகவலில், Taman Gemilang Indah பகுதியில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், 47 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், Heroin, Methamphetamine, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும், அவற்றை பொதி செய்து விநியோகிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும், சமையலறை அலமாரியில் இருந்த எஃகு பெட்டிக்குள் இரண்டு புகை குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.








