பினாங்கு துணை முதல்வர் டாக்டர்.பி. ராமசாமிக்கு எதிராக, மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தைப்பூச விழாவின் போது, கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு எஸ்.ஒ.பி நடைமுறைகள் தொடர்பாக, மலேசிய இந்து சங்கத் தலைவர் என்ற முறையில், தம்மை அவமதித்ததாக டாக்டர் ராமசாமிக்கு எதிராக மோகன் ஷான் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
எனினும், இவ்வழக்கு தொடர்பாக மறு மதிப்பீடு செய்த பின்னர், டாக்டர் ராமசாமிக்கு எதிராக இவ்வழக்கைத் தொடர நோக்கம் கொண்டிருக்க வில்லை என்று மோகன் ஷான் முடிவுச் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இவ்வழக்கை மோகன் ஷான் மீடுக்கொண்டிருப்பதை, டாக்டர் ராமசாமியின் முதன்மை வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


