பினாங்கு துணை முதல்வர் டாக்டர்.பி. ராமசாமிக்கு எதிராக, மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தைப்பூச விழாவின் போது, கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு எஸ்.ஒ.பி நடைமுறைகள் தொடர்பாக, மலேசிய இந்து சங்கத் தலைவர் என்ற முறையில், தம்மை அவமதித்ததாக டாக்டர் ராமசாமிக்கு எதிராக மோகன் ஷான் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
எனினும், இவ்வழக்கு தொடர்பாக மறு மதிப்பீடு செய்த பின்னர், டாக்டர் ராமசாமிக்கு எதிராக இவ்வழக்கைத் தொடர நோக்கம் கொண்டிருக்க வில்லை என்று மோகன் ஷான் முடிவுச் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இவ்வழக்கை மோகன் ஷான் மீடுக்கொண்டிருப்பதை, டாக்டர் ராமசாமியின் முதன்மை வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


