May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கியஸ் தொழிற்சாலையில் தீ: மூவர் படுகாயம்

Share:

கிள்ளான், ஜன. 21-


கிள்ளான், தாமான் அமான் பெர்டானாவில் கியஸ் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இதர நால்வர் காயமின்றி உயிர் தப்பினர்.

அந்த தொழிற்சாலையின் கட்டடத்தில் கியஸ் கலன்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து தீ பரவியதாக நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தொழிற்சாலையின் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை தீ பரவியது. வட கிள்ளான், தென் கிள்ளான், அண்டலாஸ், புக்கிட் ஜெலுத்தோங், காப்பார், டாமன்சாரா, போர்ட்கிள்ளான் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் முழு வீச்சில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் கடும் காயங்களுக்கு ஆளான மூன்று நபர்கள், அந்நியத் தொழிலார்கள் என்று அடையாளம் கூறப்பட்டதாக அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்