உடல் உறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, மறைந்த முகமது சுக்ரி பஸ்லி என்பவரின் குடும்பத்தினர் முன்வந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
இதயக் கோளாறு காரணமாகத் தனது 31-வது வயதில் காலமான சுக்ரி, ஒரு சமையல்காரராக பணியாற்றி வந்தவர். அவரின் மறைவுக்குப் பின், அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், எலும்புகள் மற்றும் தோல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ஏழு நோயாளிகள் புதிய வாழ்வைப் பெறவுள்ளனர்.
இந்த உன்னதப் பணி திரெங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் நடைபெற்றது. சுக்ரியின் தியாகத்தைப் போற்றும் விதமாக, அறுவை சிகிச்சை அறைக்குச் செல்லும் வழியில் மருத்துவமனை ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று அவருக்குக் கௌரவ மரியாதை செலுத்தினர்.
"பிறருக்கு உதவும் குணம் கொண்ட சுக்ரியின் இந்த இறுதிச் செயல், பலரது வாழ்வில் ஒளியேற்றியுள்ளது" என அவரது குடும்பத்தினர் உருக்கத்துடன் தெரிவித்தனர்.








