Dec 4, 2025
Thisaigal NewsYouTube
திறன் குறைந்த வேலைகளுக்கு அகதிகள் பயன்படுத்தப்படக்கூடும்
தற்போதைய செய்திகள்

திறன் குறைந்த வேலைகளுக்கு அகதிகள் பயன்படுத்தப்படக்கூடும்

Share:

நாட்டில் புகலிடம் தேடி, அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ள வெளிநாட்டவர்களை திறன் குறைந்த வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.தற்போது அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள கோட்டாவின் ​கீழ் வேலை காலியிடங்களுக்கு அகதிகள் அந்தஸ்தில் உள்ளவர்களை கொண்டு நிரப்புவதற்கு ஆராயப்பட்டு வருவதாக சபா, சரவா, சிறப்புப்பணிகளுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்தார்.

தற்போதைய வேலை வாய்ப்பு கொள்கைகள், தொழிலாளர் ச​ட்டங்கள் ஆகியவற்றின் விதிகளை நிறைவு செய்யக்கூடிய முதலாளிகள் அகதிகளை வேலையாட்களாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அர்மிசான் முஹமாட் அலி மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட அகதிகளின் உண்மையான நிலவரங்களை பெறுவதற்கு கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. அகதிகள் ​தூதரகத்தின் ஒத்துழைப்பை தாங்கள் நா​டி​யுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News