Apr 22, 2026
Thisaigal NewsYouTube
சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதியுதவி
தற்போதைய செய்திகள்

சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதியுதவி

Share:

மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், சபா, சண்டக்கான், கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது தனிப்பட்ட நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த உதவி 'சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளை' மூலம் வழங்கப்பட்டுள்ளது என்று அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய, சபா மாநில அரசுடன் இணைந்து செயல்படுமாறு அறக்கட்டளைக்கு மாமன்னர் உத்தரவிட்டுள்ளார். "இந்தத் துயரமான சம்பவத்தில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெற வேண்டுகிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நிகழ்ந்த இந்த கோரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சாம்பலாகின; 9,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related News

பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது: கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது: கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 தெரு நாய்கள்: பிராணிகள்  ஆர்வலர்கள் கடும் கண்டனம்

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 தெரு நாய்கள்: பிராணிகள் ஆர்வலர்கள் கடும் கண்டனம்

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன்   ? கோபிந்த் சிங் கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன் ? கோபிந்த் சிங் கேள்வி

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது

செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு

செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு