Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

ஜாசின், ஜனவரி.23-

கடந்த ஆண்டு ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக மூன்று நபர்கள் மலாக்கா, ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

67 வயது கே. கிருஷ்ணமூர்த்தி, 35 வயது முகமது அஸ்மி முகமது நோர் மற்றும் 26 வயது எம். யோகேஸ்வரன் ஆகிய மூவரும் மாஜிஸ்திரேட் மஸானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி இரவு 7.37 மணியளவில் மலாக்கா, ஜாசின் பெஸ்தாரி பகுதியில் 52 வயது குணாளன் என்பவரின் மரணத்திற்கு தூண்டுகோலாக இருந்ததாக இந்த மூவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் குணாளன் என்பவர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு வேலையற்ற நபரான குணாளன், சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உயிரிழந்தார்.

அவருக்கு மரணம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மூவருக்கு எதிராக குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் நோக்கமில்லா கொலையாக இவ்வழக்கு வகை செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

முதலீட்டு மோசடி: ‘டான்ஸ் ஶ்ரீ’ பட்டம் பெற்ற பிரமுகருக்கு 4 நாள் தடுப்புக் காவல் - 300 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு

முதலீட்டு மோசடி: ‘டான்ஸ் ஶ்ரீ’ பட்டம் பெற்ற பிரமுகருக்கு 4 நாள் தடுப்புக் காவல் - 300 மில்லியன் ரிங்கிட் வரை முறைகேடு