கோலாலம்பூர், சௌகிட், பசார் ராஜா போட், ஈரச்சந்தையில் நிகழ்ந்த அமளி துமளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அடையாளம் காணப்பட்ட சில நபர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் எ.எஸ்.பி நூர் டெல்ஹான் தெரிவித்தார். அந்த சந்தையில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக சில தனி நபர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் இந்தச் சலசலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
தனிநபர்கள் சட்டங்களை, கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறிய அவர், இது தொடர்பாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


