கோலாலம்பூர், சௌகிட், பசார் ராஜா போட், ஈரச்சந்தையில் நிகழ்ந்த அமளி துமளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அடையாளம் காணப்பட்ட சில நபர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் எ.எஸ்.பி நூர் டெல்ஹான் தெரிவித்தார். அந்த சந்தையில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக சில தனி நபர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் இந்தச் சலசலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
தனிநபர்கள் சட்டங்களை, கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறிய அவர், இது தொடர்பாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


