கோலாலம்பூர், சௌகிட், பசார் ராஜா போட், ஈரச்சந்தையில் நிகழ்ந்த அமளி துமளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அடையாளம் காணப்பட்ட சில நபர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் எ.எஸ்.பி நூர் டெல்ஹான் தெரிவித்தார். அந்த சந்தையில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக சில தனி நபர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் இந்தச் சலசலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
தனிநபர்கள் சட்டங்களை, கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறிய அவர், இது தொடர்பாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


