கோலாலம்பூர், சௌகிட், பசார் ராஜா போட், ஈரச்சந்தையில் நிகழ்ந்த அமளி துமளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அடையாளம் காணப்பட்ட சில நபர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் எ.எஸ்.பி நூர் டெல்ஹான் தெரிவித்தார். அந்த சந்தையில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக சில தனி நபர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் இந்தச் சலசலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
தனிநபர்கள் சட்டங்களை, கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறிய அவர், இது தொடர்பாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


