Apr 2, 2026
Thisaigal NewsYouTube
சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை அமைச்சு விரைவில் தீருக்கும் ! – அமைச்சர் சுல்கெஃப்லி அகமது வாக்குறுதி
தற்போதைய செய்திகள்

சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை அமைச்சு விரைவில் தீருக்கும் ! – அமைச்சர் சுல்கெஃப்லி அகமது வாக்குறுதி

Share:

ஜன.3-

சுகாதார துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையும் சமநிலையற்ற விநியோகப் பிரச்சினைகளையும் இந்த ஆண்டில் தீர்க்க சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr Dzulkefly தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அமைச்சுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், நோய்களை தீவிரமாகவும் விரிவாகவும் கையாள்வதிலும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நாட்டின் சுகாதார நிதியை மாற்றுவதற்கும், அதிக மருத்துவப் பணவீக்கத்தை கையாள்வதற்கும், DRG, CRG ஆகிய நோய் கண்டறிதல் தொடர்பான குழுக்கள் போன்ற புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான தேசிய சுகாதாரக் கட்டணப் பொறிமுறை குழு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாக Dr Dzulkefly குறிப்பிட்டார்.

தனியார் சுகாதார காப்பீட்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஊக்குவிப்பதோடு, காப்பீடு இல்லாத T20 பிரிவினருக்கு காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என Dr Dzulkefly நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்