ஜன.17
வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படவிருக்கிறது.
தற்போது விதிக்கப்படும் 22 காசு கட்டணத்துடன் ஒப்பிடுகையில் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு பயன்படுத்தக்கூடிய 20 கனமீட்டர் வரை தண்ணீருக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கும் 50 காசு கட்டணம் விதிக்கப்படவிருப்பதாக . மாநில முதலமைச்சர் Chow Kon Yeow (செள கோன் இயோவ் ) அறிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு பயன்படுத்தக்கூடிய 20 முதல் 35 கனமீட்டர் தண்ணீருக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கு ஒரு வெள்ளி 10 காசு கட்டணம் விதிக்கப்படும் அதேவேளையில் 35 கனமீட்டருக்கும் கூடுதலாக நீரை பயன்படுத்தக்கூடியவர்களுக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கும் 2 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும்.\
முன்பு இதற்கு / ஒரு கன மீட்டருக்கு முறையே 46 மற்றும் 68 காசுகள் கட்டணமாக விதிக்கப்பட்டதை முதலமைச்சர் செள கோன் இயோவ் சுட்டிக்காட்டினார்.








