சரவாவில் ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கியது தொடர்பில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஆறு ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்ட ஃபெல்டாவின் முன்னாள் தலைவரும், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மந்திரி பெசாருமான டான் ஸ்ரீ முகமது ஈசா வின் மேல்முறையீடு தொடர்பான வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை அளிக்கப்படவிருந்த தீர்ப்பை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நாளை அளிக்கப்படவிருந்த தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் ஏன் திடீரென்று ஒத்திவைத்துள்ளது என்பதற்கான காரணங்கள் தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.








