Dec 20, 2025
Thisaigal NewsYouTube
சொந்த தந்தையின் காரினால் மோதப்பட்ட 2 வயது சிறுமி மரணம்
தற்போதைய செய்திகள்

சொந்த தந்தையின் காரினால் மோதப்பட்ட 2 வயது சிறுமி மரணம்

Share:

தங்காக், டிசம்பர்.20-

இரண்டு வயது சிறுமி ஒருவர், சொந்த தந்தையின் காரினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று முன் தினம் காலை 8.15 மணியளவில் ஜோகூர், தங்காக்கில் நிகழ்ந்தது.

உடலில் கடுமையான காயங்களுக்கு ஆளாகி சுயநினைவு இழந்த நிலையில் மூவார், சுல்தானா ஃபாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சிறுமி தனது தந்தையின் காரின் பின்னால் நின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. காரின் பின்னால் தனது மகள் நிற்பதை உணராத தந்தை, காரை பின்னோக்கி எடுத்த போது அந்த வாகனத்தால் மோதப்பட்டு, அந்த சிறுமியின் உடலிலும், தலையிலும் கடும் காயங்கள் ஏற்பட்டதாக தங்காக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Jamellulkamal Abdul Halim தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News