Jul 17, 2026
Thisaigal NewsYouTube
ஷரியா வங்கி உயர் அதிகாரி பணி நீக்கம்: தொழில் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

ஷரியா வங்கி உயர் அதிகாரி பணி நீக்கம்: தொழில் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

ஷரியா கொள்கைகளைப் பின்பற்றும் வங்கியான அல் ராஜி பேங்கிங் & இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (மலேசியா) பெர்ஹாட்-ல், சில்லறை வங்கிச் சேவை இயக்குநராகப் பணியாற்றிய யாப் டீ குவோங் என்பவர், நிறுவன நிகழ்வின் போது மது அருந்தியது மற்றும் நிறுவனத்தின் செலவில் ஸ்பா வசதிகளைப் பயன்படுத்திய புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கோலாலம்பூர் தொழில் நீதிமன்றம், வங்கியின் கொள்கைகளை மீறியது மற்றும் நம்பிக்கையைச் சிதைத்தது தீவிரமான குற்றம் என்று கூறி, அவரது பணி நீக்கம் செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்தது.

Related News