Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அரசு பொது பல்கலைக்கழகங்களில் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்ப்பு: உத்தரவாதம் அளித்தது உயர்க்கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

அரசு பொது பல்கலைக்கழகங்களில் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்ப்பு: உத்தரவாதம் அளித்தது உயர்க்கல்வி அமைச்சு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களின் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை, முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலான கொள்கையைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது என்று உயர்க்கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதே வேளையில் UPUOnline முறையில் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறையில் முறைகேட்டிற்கு வழிவகுக்கக்கூடிய கசிவுகள் இருப்பதாகக் கூறப்படுதை உயர்க்கல்வி அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு UPUOnline முறையின் கீழ் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 866 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 78 ஆயிரத்து 883 பேர் அல்லது 71.8 விழுக்காட்டினருக்கு இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி தலைமை இயக்குநர் பேராசிரியர் அஸ்லிண்டா அஸ்மான் கூறினார்.

பல்லைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையானது, அனைத்து தகுதியுள்ள மனுதாரர்களையும் உள்ளடக்கியதாகும். மிக உயர்ந்த தகுதி முதல் குறைந்த தகுதி வரை வரிசைப்படுத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விளக்கம் அளித்தார்.

4.00 என்ற ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரியான CGPA – ஐ பெற்று பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து STPM அல்லது அதற்கு நிகரான மாணவர்களுக்கு பட்டப்படிப்பிற்கான இடங்கள் கட்டாயம் வழங்கப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சு உறுதி அளித்து இருப்பதாக பேராசிரியர் அஸ்லிண்டா கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து