Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.07-

நீதித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜசெக.வைச் சேர்ந்த செபூத்தே எம்.பி. திரேசா கோக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளை நிரப்புவதில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றசாட்டுகள் மத்தியில் அது தொடர்பாக விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் காலியாக இருக்கும் நீதிப் பரிபாலனத்தின் உச்சப் பீடமான அவ்விரு முக்கியப் பதவிகளும் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன, அதற்கான காரணங்கள் என்ன என்று பல்வேறு ஐயங்கள் வலுத்து வரும் வேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இது குறித்து ஆளும் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிப்பது அவசியமாகும் என்று திரேசா கோக் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது