Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு சொந்தமான காரை எரித்த நபர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்.5-

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர்பாரு, கொலம்பியா மருத்துவமனை அருகில் , ஜாலான் தெப்ராவ் சாலை சமிக்ஞை விளக்குப்பகுதியில் தனது மனைவிக்குச் சொந்தமான காரை தீயிட்டு கொளுத்தியதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய அந்த நபர், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பத்து பஹாட், புகிட் பாசீர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு புகிட் பாசீர், பத்து பஹாட் மற்றும் ஜோகூர்பாரு, தாமான் ஶ்ரீ தெப்ராவில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் அந்த நபர் பிடிபட்டதாக ரவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

சம்பவத்திற்கு பின்னர் அந்த நபர், தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட Toyota Vellfire வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து