May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு சொந்தமான காரை எரித்த நபர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்.5-

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர்பாரு, கொலம்பியா மருத்துவமனை அருகில் , ஜாலான் தெப்ராவ் சாலை சமிக்ஞை விளக்குப்பகுதியில் தனது மனைவிக்குச் சொந்தமான காரை தீயிட்டு கொளுத்தியதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய அந்த நபர், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பத்து பஹாட், புகிட் பாசீர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு புகிட் பாசீர், பத்து பஹாட் மற்றும் ஜோகூர்பாரு, தாமான் ஶ்ரீ தெப்ராவில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் அந்த நபர் பிடிபட்டதாக ரவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

சம்பவத்திற்கு பின்னர் அந்த நபர், தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட Toyota Vellfire வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News