Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கொலை : இருவர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்.7

ஜோகூர்பாரு, தாமான் ஶ்ரீ ஸ்கூடாயில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 24 மணி நேரத்தில் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை தொடர்பான தகவலைப் பெற்ற அடுத்த கணமே சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.

மூதாட்டியின் கொலை தொடர்பில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அவரின் வாரிசுதாரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.

51 மற்றும் 58 வயதுடைய ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணைக்கு உதவும் வகையில் கைப்பேசி, இரண்டு அடகுக்கடை ரசீதுகள், சிம் கார்ட் முதலிய பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

79 வயதுடைய அந்த மாது, கடந்த புதன்கிழமை வீட்டில் இறந்து விட்டதாக புகார் பெறப்பட்டது. போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அந்த மூதாட்டிக்கு சொந்தமான சில பொருட்கள் காணாதது குறித்து கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் மரணம் கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வீர் சிங் தெரிவித்தார்.

பிடிபட்ட இரு நபர்களில் ஒருவர், ஏற்கனவே குற்றப்பதிவுகள் கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை