Mar 24, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை தலைவர் இன்னும் முடிவு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை தலைவர் இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை 05-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸிம்ஹ மண்சோர் சம்பந்தப்பட்ட 70 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான 12 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு பிரதிநிதித்துவ மனு ஒன்றை அவர் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த பிரதிநிதித்துவ மனு குறித்து சட்டத்துறை அலுவலகம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரோஸ்மாவின் வழக்கறிஞர் அமீர் ஹம்சா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தனது வருமானம் குறித்து உள்நாட்டு வருமான வரி வாரியத்தில் அறிவிக்காதது தொடர்பிலும் ரோஸ்மா மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

ரோஸ்மாவிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுமா? அல்லது வழக்கை தொடர்வதற்கு உத்தரவிடப்படுமா? என்பது குறித்து சட்டத்துறை அலுவலகத்தின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக வழக்கறிஞர் அமீர் ஹம்சா நீதிமன்றத்தல் தெரிவித்தார்.

Related News