May 5, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலப் பரிசோதனை
தற்போதைய செய்திகள்

முதியவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலப் பரிசோதனை

Share:

பட்டர்வொர்த், பிப்ரவரி.03-

கடந்த மாதம் பட்டர்வொர்த், கம்போங் ஜாவா உணவகப் பகுதியில் வீடற்ற முதியவர் ஒருவருக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

குற்றம் சாட்டப்பட்ட 44 வயதுடைய எம். பிரகாஷ் என்பவரின் மனநல மதிப்பீட்டு அறிக்கையைப் பெறுவதற்காக, மாஜிஸ்திரேட் அய்னி அடிலா வரும் பிப்ரவரி 11-ஆம் தேதியைப் புதிய விசாரணைத் தேதியாக நிர்ணயித்தார்.

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், கம்போங் ஜாவா உணவகத்தில் 67 வயது முதியவரைத் தன்னிச்சையாகக் கடுமையாகத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பிரகாஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 325 ஆவது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி வெளியான ஊடக அறிக்கைகளின்படி, தாக்குதலுக்குள்ளான முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

முதியவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலப... | Thisaigal News